Friday, September 6, 2019

14. குழவி தளர் நடை காண்டல்



14.  குழவி தளர் நடை காண்டல்


குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
குழவி தளர் நடை காண்டல் இனிதே
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து
மனன் அஞ்சான் ஆகல் இனிது

எவை இன்பம் தரும்:
குழந்தைகளின் தளர் நடையைக் காண்பது,
அவர்களது மழலைச்சொல்  கேட்பது,
தீயவர்  சினத்துடன் துன்புறுத்துகையில் அஞ்சா நெஞ்சம் கொண்டிருப்பது, 
ஆகியன இன்பம் தருவனவாம்.

Kuḻavi taḷar naṭai kāṇṭal iṉitē
avar maḻalai kēṭṭal amiḻtiṉ iṉitē
viṉaiyuṭaiyāṉ vantu aṭaintu veytu uṟum pōḻtu
maṉaṉ añcāṉ ākal iṉitu


---




No comments:

Post a Comment