Friday, September 6, 2019

20. சலவரை சாரா விடுதல்



20. சலவரை சாரா விடுதல்


சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சலவரை சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது

எவை நன்மை தரும்:
வஞ்சகர்களுடன் சேராதிருத்தல், 
ஆன்றோர் அறவுரை வழிநடத்தல், 
அகன்ற இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் உரிமையுடன் வாழ்வது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Calavarai cārā viṭutal iṉitē
pulavartam vāymoḻi pōṟṟal iṉitē
malartalai ñālattu maṉṉuyirkku ellām
takutiyāl vāḻtal iṉitu


---




No comments:

Post a Comment