20. சலவரை சாரா விடுதல்
சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சலவரை சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
எவை நன்மை தரும்:
வஞ்சகர்களுடன் சேராதிருத்தல்,
ஆன்றோர் அறவுரை வழிநடத்தல்,
அகன்ற இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் உரிமையுடன் வாழ்வது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Calavarai cārā viṭutal iṉitē
pulavartam vāymoḻi pōṟṟal iṉitē
malartalai ñālattu maṉṉuyirkku ellām
takutiyāl vāḻtal iṉitu
---
No comments:
Post a Comment