Friday, September 6, 2019

21. பிறன்கை பொருள் வெளவான்



21.  பிறன்கை பொருள் வெளவான்


பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிறன்கை பொருள் வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந்து அல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேரா
திறம் தெரிந்து வாழ்தல் இனிது

எவை நன்மை தரும்:
பிறர் செல்வத்தைக் கவர்ந்து வாழாமல் இருப்பது,
அறம் வழியில் நடப்பதும், தீமை செய்யாதிருப்பதும்,
தவறியும் பண்பில்லா குழப்பவாதிகளைத் துணை கொள்ளாமல் வாழ்வது, 
ஆகியன நன்மை தருவனவாம்.

Piṟaṉkai poruḷ vowvāṉ vāḻtal iṉitē
aṟampurintu allavai nīkkal iṉitē
maṟantēyum māṇā mayarikaḷ cērā
tiṟam terintu vāḻtal iṉitu


---




No comments:

Post a Comment