22. வருவாய் அறிந்து வழங்கல்
வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே
பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார்
திரிபு இன்றி வாழ்தல் இனிது
எவை நன்மை தரும்:
தனது வருமானத்திற்கு ஏற்ப வழங்குவது,
ஒருவரையும் சார்ந்து வாழாத மனத்திட்பம்,
மிக்க பலன் தரும் என்றாலும் விரும்பியவற்றை ஆராயாமல் செய்வதைத் தவிர்ப்பதுடன் அந்த இயல்பிலிருந்து மாறாது செயல்படுவது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Varuvāy aṟintu vaḻaṅkal iṉitē
oruvar paṅku ākāta ūkkam iṉitē
peru vakaittu'āyiṉum peṭṭavai ceyyār
tiripu iṉṟi vāḻtal iṉitu
---
No comments:
Post a Comment