25. ஐவாய் வேட்கை அவா அடக்கல்
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே
நில்லாத காட்சி நிறை இல் மனிதரை
புல்லா விடுதல் இனிது
எவை நன்மை தரும்:
ஐம்புலன்களின் தூண்டுதலால் வரும் ஆசைகளை விட்டொழிப்பது,
கைமேல் பணம் வரும் என்றாலும் கல்லாதவர் தொடர்பை விட்டுவிடுவது,
நிலையற்ற மனம் கொண்ட குணமற்றவருடன் சேராது விலகிவிடுவது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Ai vāy vēṭkai avā aṭakkal muṉ iṉitē
kaivāy poruḷ peṟiṉum kallārkaṇ tīrvu iṉitē
nillāta kāṭci niṟai il maṉitarai
pullā viṭutal iṉitu
---
No comments:
Post a Comment