27. தானம் கொடுப்பான் தகை ஆண்மை
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன்இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே
ஊனம் கொண்டாடார் உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது
எவை நன்மை தரும்:
உதவி நல்குவோரின் அருளுடைமை,
மதிப்பிழந்த பின் உயிர்வாழாமை,
குற்றம் பார்க்காதவர் நன்மை தருவனவற்றை முறைப்படி ஏற்றுக் கொள்ளுதல்,
ஆகியன நன்மை தருவனவாம்.
Tāṉam koṭuppāṉ takai āṇmai muṉ iṉitē
māṉam paṭa variṉ vāḻāmai muṉ iṉitē
ūṉam koṇṭāṭār uṟuti uṭaiyavai
kōḷ muṟaiyāl kōṭal iṉitu
---
No comments:
Post a Comment