Friday, September 6, 2019

29. கயவரை கை இகந்து வாழ்தல்



29.  கயவரை கை இகந்து வாழ்தல்


கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கயவரை கை இகந்து வாழ்தல் இனிதே
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
ஒளி பட வாழ்தல் இனிது

எவை நன்மை தரும்:
தீயவர்களை விட்டு விலகி வாழ்வது, 
வாழ்வில் உயரவேண்டும் என்ற முனைப்பு தோன்றுவது, 
இல்லாதவரை ஏளனம் செய்யாதவர் இவரென்று போற்றப்படும் நிலையில் வாழ்வது,  
ஆகியன நன்மை தருவனவாம்.

Kayavarai kai ikantu vāḻtal iṉitē
uyarvu uḷḷi ūkkam piṟattal iṉitē
eḷiyar ivar eṉṟu ikaḻntu uraiyārāki
oḷi paṭa vāḻtal iṉitu


---






No comments:

Post a Comment