Friday, September 6, 2019

32. கற்று அறிந்தார் கூறும் கரும பொருள்





32.  கற்று அறிந்தார் கூறும் கரும பொருள் 


கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கற்று அறிந்தார் கூறும் கரும பொருள் இனிதே
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே
தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா
பத்திமையின் பாங்கு இனியது இல்

எவை நன்மை தரும்:
கற்றோர் சொல்லும் பயன் தரும் அறிவுரை, 
குடிமக்களின் நலன் கருதாத அரசின் கீழ் வாழாதிருப்பது, 
ஆராயாது ஊறு விளைவித்தவரைத் தண்டிக்காது அவரிடம் அன்புகாட்டுவது,  
ஆகியன நன்மை தருவனவாம்.

Kaṟṟu aṟintār kūṟum karuma poruḷ iṉitē
paṟṟu amaiyā vēntaṉkīḻ vāḻāmai muṉ iṉitē
teṟṟeṉavu iṉṟi teḷintārai tīṅku ūkkā
pattimaiyiṉ pāṅku iṉiyatu il


---



No comments:

Post a Comment