Friday, September 6, 2019

33. ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம்



33.  ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம்


ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே
தானே மடிந்து இரா தாளாண்மை முன் இனிதே
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது

எவை நன்மை தரும்:
மக்கள் சினம் கொள்ளாத வகையில் செயல்படுபவனின் முயற்சி, 
தானே சோம்பி இருக்காமல் செய்யும் முயற்சி, 
வாள்கள்  மோதும் போர்க்களத்தில் திருந்தாத மன்னரின் படையை முறியடித்தல், 
ஆகியன நன்மை தருவனவாம்.

Ūr muṉiyā ceytu oḻukum ūkkam mika iṉitē
tāṉē maṭintu irā tāḷāṇmai muṉ iṉitē
vāḷ mayaṅku maṇṭu amaruḷ māṟāta mā maṉṉar
tāṉai taṭuttal iṉitu

---



No comments:

Post a Comment