34. எல்லி பொழுது வழங்காமை
எல்லிப் பொழுது வழங்காமைமுன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே
சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே
புல்லி கொளினும் பொருள் அல்லார்தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது
எவை நன்மை தரும்:
இருளில் பயணம் செய்யாதிருப்பது,
உரையாடலில் பிழையின்றி பேசக்கூடிய திறமை,
வலிய வந்து நட்பு பாராட்டுகின்ற, ஒரு பொருட்டாக மதிக்கத்தகாத வீணர்களின் உறவைத் தவிர்ப்பது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Elli poḻutu vaḻaṅkāmai muṉ iṉitē
colluṅkāl cōrvu iṉṟi collutal māṇpu iṉitē
pulli koḷiṉum poruḷ allārtam kēṇmai
koḷḷā viṭutal iṉitu
---
No comments:
Post a Comment