35. ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல்
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல்முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப்பாங்கறிதல்
வெற்வேறில் வேந்தர்க்கு இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்று இலனாய் பல்லுயிர்க்கும் பார்த்து உற்று பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது
எவை அரசுக்கு நன்மை தரும்:
ஒற்றரைக் குறித்தும் மற்ற ஒற்றரால் ஒற்று அறிந்து உண்மையறிவது,
வழக்கை ஆராய்ந்து நீதி வழங்குவது,
பற்றின்றி, அனைத்து உயிர்களையும் சமமாக மதிக்கும் பண்பைக் கொண்டிருப்பது,
ஆகியன அரசுக்கு நன்மை தருவனவாம்.
Oṟṟiṉāṉ oṟṟi poruḷ terital māṇpu iṉitē
muṉtāṉ terintu muṟaiceytal muṉ iṉitē
paṟṟu ilaṉāy palluyirkkum pārttu uṟṟu pāṅku aṟital
veṟṟi vēl vēntarkku iṉitu
---
No comments:
Post a Comment