39. பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை
பிச்சைபுக் குணபான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபொலிசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே
உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது
எவை நன்மை தரும்:
பிச்சை பெற்று உண்டு வாழ்பவர் சினம் கொள்ளாதிருப்பது,
ஒதுங்கி வாழ்ந்து துன்பத்தைத் தவிர்க்கும் பாங்கு,
அதிக வருவாய்க்கு ஆசைகொண்டு அறவழியை மீறி நடக்கும் மனத்தளர்ச்சி இல்லாதிருப்பது,
ஆகியன நன்மை தருவனவாம்.
Piccai pukku uṇpāṉ piḷiṟṟāmai muṉ iṉitē
tuccil iruntu tuyar kūrā māṇpu iṉitē
uṟṟa policai karuti aṟaṉ orū'um
oṟkam ilāmai iṉitu
---
No comments:
Post a Comment