Friday, September 6, 2019

கடவுள் வாழ்த்து - கண் மூன்று உடையான்



கடவுள் வாழ்த்து - கண் மூன்று உடையான்


கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய் மாலையானை தொழல் இனிதே
முந்துற பேணி முகம் நான்கு உடையானை
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது

எவை நன்மை தரும்:
மூன்று கண்களைக் கொண்ட சிவனின் அடி பணிதல், 
பழமையான சிறப்புமிகுந்த துளசி மாலை அணிந்த திருமாலைத் தொழுதல், 
முகம் நான்கு கொண்ட பிரம்மனை வழிபடுதல், 
ஆகியன நன்மை தருவனவாம்.

Kaṇ mūṉṟu uṭaiyāṉ tāḷ cērtal kaṭitu iṉitē
tol māṇ tuḻāy mālaiyāṉai toḻal iṉitē
muntuṟa pēṇi mukam nāṉku uṭaiyāṉai
ceṉṟu amarntu ēttal iṉitu


---




No comments:

Post a Comment